தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒவ்வொரு தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் சேர்ப்பு.. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

டெல்லி : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரம் குறித்து பேசினார். அதில், "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வேறு மாதிரி இருந்தாலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. புல்வாமா தாக்குதல், சிந்தூர் நடவடிக்கை போன்ற பல காரணங்கள் கருத்துக்கணிப்பு மாற்றத்துக்கு காரணம். தேர்தலுக்கு முன், பின் கருத்துக்கணிப்பு, உண்மையான தேர்தல் முடிவு ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

திடீரென பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மராட்டியத்தில் 5 மாதத்தில் ஏராளமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மராட்டியத்தில் 5 ஆண்டில் சேர்க்கப்பட்டதை விட 5 மாதத்தில் ஏராளமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மராட்டியத்தில் கடைசி நேரத்தில் அதிக வாக்குகள் பதிவானதாக ஆணையம் சொல்கிறது. வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில் எந்த வாக்குச்சாவடிகளிலும் அதிகம் கூட்டம் இல்லை. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவிகளை கேட்டபோது ஆணையம் தர மறுத்துவிட்டது. பல தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.

பாஜகவுக்கு சாதகமாக ஒவ்வொரு தொகுதிகளிலும் குறிப்பிட்ட அளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது. மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. ஒரு நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளது. கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில் கிட்டத்தட்ட 12,000 போலி வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களை நாங்கள் ஆய்வு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கருதுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.