தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளையாட்டரங்கு பாதுகாவலருடன் கம்பீர் மோதல்

லண்டன்: இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் கென்னிங்டன் ஓவல் அரங்கில் கடைசி டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. அந்த அரங்கில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்னிலையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற கென்னிங்டன் அரங்கின் பாதுகாவலர் லீ ஃபோர்டிஸ், இந்திய வீரர்களிடம் ஏதோ கூறினார். அப்போது அவரிடம் கம்பீர் பதிலுக்கு ஏதோ சொன்னார். அதை தொடர்ந்து சாதாரண பேச்சு வாக்குவாதமாக மாறியது. முடிவில் கம்பீர், ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லத் தேவையில்லை’ என்று கோபத்துடன் கூறியது எல்லோருக்கும் கேட்டது.
Advertisement

இது குறித்து கென்னிங்டன் அரங்கம் தரப்பிலோ, இந்திய அணித் தரப்பிலோ எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த இடத்தில், ‘பயிற்சி செய்யக் கூடாது’ என்று லீ கூறியதுதான் பிரச்னைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, லீ ஃபோர்டிசிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் என்ன மாதிரி நடந்து கொண்டார் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார். இதற்கிடையே, இந்திய அணியில், பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

Related News