தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி: முக்கிய சந்திப்புகளில் உறியடியும் கலக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், நகரின் முக்கிய சந்திப்புகளில் உறியடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், இளைஞர்கள் போட்டி போட்டு கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஆடிப்பூர கொட்டகையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நகரின் முக்கிய சந்திப்புகளில் உறியடி நிகழ்ச்சியும் நடைபெறும். இதன்படி இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில், தெய்வங்கள் முன் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதையொட்டி முன்னதாக ஆலிலை கண்ணன், ஆண்டாள், ரெங்கமன்னார், தவழும் கண்ணன் ஆகிய சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement

வீதியுலாவின்போது நகரின் முக்கிய சந்திப்புகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உறியடி நடத்தினர். பின்னர் இரவு 10.30 மணியளவில் ஆண்டாள் கோயில் முன் அமைந்துள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆலிலை கண்ணன், ஆண்டாள், ரெங்கமன்னார், தவழும் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெங்கநாதபுரம் பகுதி இளைஞர்கள் போட்டிபோட்டு வழுக்கு மரம் ஏறினர். இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement