தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமலை நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாத சத்ரஸ்தாபன உற்சவம்

 

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாதம் உள்ளது. இதற்கு சத்ரஸ்தாபன உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் 2வது நைவேத்தியத்திற்கு பிறகு, மங்கள நாதஸ்வர வாத்திய இசையுடன் பூஜை பொருட்கள், மலர், பிரசாதம் மற்றும் குடைகளுடன் கோயிலின் திருமாடவீதி வழியாக அர்ச்சகர்கள் நாராயணகிரி மலைக்கு சென்றனர். அங்கு ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, அலங்கரிக்கப்பட்ட குடை நிறுவினர். பின்னர் பூஜை செய்யப்பட்டு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. வேதம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நிகழ்த்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

புராணங்களின்படி கலியுகத்தில், திருமலையின் 7 மலைகளில் மிக உயர்ந்தது நாராயணகிரி மலை. இந்த மலையின் உச்சியில் இருந்தபடி சீனிவாச பெருமாள், வைகுண்டத்தில் இருந்து பூலோகத்தில் முதலில் காலடி எடுத்து வைத்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், துவாதசியன்று சத்ர ஸ்தாபன உற்சவம் செய்வது வழக்கம். மேலும் இந்த காலகட்டத்தில் காற்று அதிகமாக வீசும். நாராயணகிரி மலையின் உச்சி அதிக உயரத்தில் உள்ளதால் காற்று அடிக்கடி வீசும். இதனால் வாயுதேவனை பிரார்த்தனை செய்து இங்கு ஒரு குடை நிறுவப்படுகிறது என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 71,144 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,889பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் ரூ.4.15 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 26 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.