தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில், நடந்த முடிந்த தேர்தலில் 14 லட்சத்து 35 ஆயிரத்து 243 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் (60.21%). தேர்தல் வாக்கு எண்ணிக்கை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்த்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
Advertisement

காலை 8.20க்கு தபால் வாக்குகள் எண்ண தொடங்கினர். அதே நேரத்தில் வாக்கு இயந்திரங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 10 மணி அளவில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியானது. முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15,934 வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். இறுதிச்சுற்று வரையில் அவரே முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி 32 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் தபால் ஓட்டுகள் 6001 பதிவாகி இருந்தன.

அதில் 447 செல்லாதவை. தபால் ஓட்டில் திமுக 2,940, அதிமுக 1,033, தமாகா 927, நாதக 302 பெற்றிருந்தனர். இறுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு, 7 லட்சத்து 55 ஆயிரத்து 671 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், வெற்றிச் சான்றிதழை வேட்பாளர் டி.ஆர்.பாலுவிடம் வழங்கினார். அப்போது தேர்தல் கண்காணிப்பாளர் அபிஷேக் சந்திரா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, காரப்பாக்கம் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement