தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு..!

சென்னை: காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 38 வருவாய் கிராமங்கள் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 38 வருவாய் கிராமங்களும் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

15.07.2025 அன்று, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டுமன்னார்கோவில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி ஸ்ரீமுஷ்ணம் வட்டம் தனியாக பிரிக்கப்படும் முன்பு, ஒருங்கிணைந்த காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 161 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. அவற்றிலிருந்து மேற்கண்ட அரசாணையின் வாயிலாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம் ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களையும், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களுடன் 51 வருவாய் கிராமங்களை கொண்டு ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காவனூர் ஆகிய 2 குறுவட்டங்களுடன் புதியதாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News