தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு..!!

சென்னை: 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை, திருவான்மியூர், மயூரபுரம், அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் சர்வே எண்.172/2- ல் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள திருக்கோயிலும் நிர்வகிக்க ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல்சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் காரியதரிசி TT.குப்புசாமி செட்டியார் என்பவரால் 09.09.1984 அன்று தாமாக முன் வந்து இந்து சமய அறநிலையத்துறை வசம் திருக்கோயில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
Advertisement

1985 ஆம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத்தாரால் (மூன்று மண்டலத்தார்கள்) இது திருக்கோயில் அல்ல சமாதி என விளம்புகை செய்திட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வானது வழக்கு எண் WA. 2191/2018, WA. 2316/2018, WA 2390/2018 வழக்குகளின் இறுதி தீர்ப்பை 27.03.2024 அன்று வழங்கியது. இத்தீர்ப்பில் அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத்தில் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ராஜா, அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவுடன் தொடர்ந்து சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது சட்ட விரோதமான செயலாகும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

எனவே, மேற்குறிப்பிட்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் திருக்கோயில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக திருக்கோயில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து பொது மக்கள் சுமார் 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக எதிர்வரும் 12.07.2024 அன்று நடத்தப்படவுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement