தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை கடற்கொள்ளையர் மீண்டும் அட்டூழியம் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்: ரூ.3 லட்சம் மதிப்பு வலைகளை பறித்து சென்றனர்

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதோடு ரூ.3லட்சம் மதிப்பிலான வலைகளை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை மீனவகிராமத்தை சேர்ந்த சந்திராகாசனுக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்பவளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), ஆறுகாட்டு துறை பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய 4 பேர் கடந்த 13ம்தேதி மதியம் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் இரவு மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், இவர்களது படகை சுற்றி வளைத்து அதில் ஏறினர்.
Advertisement

பின்னர் இரும்பு பைப்புகளால் 4 பேரையும் சரமாரி தாக்கியதோடு, படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலைகளை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 மீனவர்கள் நேற்று மதியம் ஆறுகாட்டுத்துறை வந்து கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 3 முறை வேதாரண்யம் மீனவர்கள் தாக்கப்பட்டதோடு, ரூ.10லட்சம் மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News