தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்டபம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு; : தங்கம் கடத்தலா? உளவுத்துறை தீவிர சோதனை

மண்டபம்: மண்டபம் அருகே, மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகை உளவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து படகுகளில் இலங்கைக்கு மாத்திரைகள், பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை கடத்துவதை தடுக்கவும், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இங்கு வருவோரை தடுக்கவும் கடலோர பாதுகாப்பு படையினர், உளவுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடலோரப் பகுதியில் படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதன்பேரில், அங்கு சென்ற அதிகாரிகள் படகை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் இலங்கையை சேர்ந்த படகு என்பது உறுதியானது. இந்த படகு எப்போது வந்தது, அதில் வந்தவர்கள் யார், எத்தனை பேர் வந்தனர், அவர்கள் தங்க கட்டிகள் கடத்தி வந்தனரா, பயங்கரவாதிகளா? என பல்வேறு கோணங்களில் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த படகை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் இலங்கை படகு கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News