தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை விடுவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் சென்னை வந்தனர்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த ஜூன் 28ம் தேதி மற்றும் 30ம் தேதி இரண்டு விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இலங்கை கடலோர காவல் படையினர், ரோந்து கப்பலில் வந்து தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, மீனவர்களை கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுபோல, கடந்த ஜூலை 27ம் தேதி, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 9 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்னர்.

Advertisement

இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இலங்கை மதிப்பில் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. அதில் 7 மீனவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி செலுத்தினர். இதையடுத்து அந்த மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதோடு இலங்கை நீதிமன்றம் படிப்படியாக மேலும் 13 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவித்தது, இதையடுத்து, தமிழக மீனவர்கள் 20 பேரும், நேற்று காலை கொழும்புவில் இருந்து, சென்னைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். 20 பேரையும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement