தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை செம்மணியில் மேலும் 65 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Advertisement

கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி 1999ல் அகழாய்வு நடத்தியதில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், செம்மணி அருகில் உள்ள நல்லூரில் மேம்பாட்டு பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை யாழ்ப்பாண நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியில் அகழாய்வு பணி நடந்தது. கடந்த 10ம் தேதி அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதில் 65 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 2 எலும்பு கூடுகள் 4 மற்றும் 5 வயதுடைய 2 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணரான ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். இங்கு மேலும் பல மனித எலும்பு கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement