தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நடுக்கடலில் மீனவர்களை தாக்கி வலைகள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து மூர்த்தி (50) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வராஜ் (55), விஜயகுமார் (40), சேகர் (60) ஆகிய 4 பேரும் முத்துவேல் (43) என்பவருக்கு சொந்தமான படகில் முத்துவேல், தனபால் (40), விஸ்வநாதன் (32) பிரகாஷ் (30) ஆகிய 4 பேரும் ரகுமான் (31) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வம் (45), அஜீத் (27), பாண்டியராஜ் (28), சஞ்சய் (26), மதேஸ் (25) ஆகிய 6 பேரும் என மொத்தம் 3 பைபர் படகில் 14 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு 4 பைபர் படகில் வந்த 14 இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பைபர் படகையும் வழிமறித்து மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள 850 கிலோ மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவி, செல்போன், நூறு லிட்டர் டீசல் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். கடற்கொள்ளையர்கள் கத்தி, மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் காயம் அடைந்த செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய மூன்று மீனவர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related News