தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை கடற்படையால் மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர். இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 313-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

Advertisement

மதியம் 100க்கும் மேற்பட்ட படகுகள் கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கச்சத்தீவு கடல் பகுதியில் இருந்து சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீன்பிடி படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை அச்சுறுத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை தொடர்ந்து மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.

இதனால், அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக நடுக்கடலில் மீன்பிடி வலைகளை வெட்டி வீசிவிட்டு இலங்கை கடற்படை பிடியில் சிக்காமல் தப்பி வந்தனர். பின்னர், தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இரவே கரை திரும்பினர். மற்றவர்கள் இன்று காலை சுமாரான மீன்பாடுடன் கரை திரும்பினர். இதனால் தங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறைபிடித்துவரும் நிலையில் தற்போது நடுக்கடலில் விரட்டியத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News