தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல் ரூ.1.75 கோடி கடல் அட்டை பறிமுதல்: சகோதரர்கள் கைது

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இரட்டையர்களான முகமது அசாருதீன் மற்றும் முகமது நசுருதீன். கீழக்கரையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் மீது கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக சம்மன் அளிப்பதற்காக கீழக்கரை எஸ்ஐ கோட்டைசாமி தலைமையிலான போலீசார், நேற்று அவர்களது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டிற்கு அருகே உள்ள குடோனில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட சுமார் 720 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் போலீசார் கீழக்கரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைத்தது தெரிய வந்தது. மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மதிப்பு ரூ.1.75 கோடி என்று கூறப்படுகிறது.
Advertisement

Advertisement