தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ பீடி இலை பறிமுதல்: கடலில் குதித்து தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை

மண்டபம்: பனைக்குளம் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 1230 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடலில் குதித்து தப்பியோடியவர்களை விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் அருகே, ஆற்றங்கரை தோப்புவலசை வடக்கு கடற்கரைப் பகுதியில், நாட்டுப்படகில் பீடி இலைகளை மறைத்து வைத்து இன்று காலை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றனர். ஆனால், நாட்டுப்படகு கடலில் கரை தட்டி நின்றது. அப்போது அந்த வழியாக ஆற்றங்கரை கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றனர்.

Advertisement

அவர்கள் சந்தேகத்தின் பேரில் நாட்டுப்படகை நோக்கி சென்றபோது, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பினர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நாட்டுப்படகை சோதனை செய்தனர். அப்போது 30 கிலோ வீதம் 41 பண்டல்களில் 1230 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. பீடி இலைகள் மற்றும் நாட்டுப்படகை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை மண்டபம் மரைன் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக கடலில் குதித்து தப்பியோடியவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காவல்துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு பின், நாட்டுப்படகுடன் பீடி இலைகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News