தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை சிறையில் உள்ளவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: வேலை நிறுத்தத்தால் 700 படகுகள் கரை நிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் வேலை நிறுத்தத்தால் 700 படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையினர் கடந்த 8ம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்து, நான்கு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அக்.27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இச்சம்பவம் ஒட்டு மொத்த ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வேலையிழந்து ரூ.3 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement