தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: தங்கச்சிமடத்தில் மறியல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்து, ஒரு படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 356 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நண்பகலில் இவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

பின்னர் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இருதய டிக்சனின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் டல்லஸ்(56), பாஸ்கரன்(45), ஆரோக்கிய சான்டிரின்(20), சிலைடன்(26), ஜேசுராஜா(33), அருள்ராபர்ட்(53), லொய்லன்(45) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேல் நடவடிக்கைக்காக மாலையில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் 7 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏஎஸ்பி மீரா தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.