தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் அதிர்ச்சி

சென்னை: இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொழும்பு விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் தரையிறங்கும்போது பறவை மோதி சேதமடைந்து இருக்கிறது. பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியது.

Advertisement

சென்னையிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானம் இன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 164 பேர் பயணித்தனர். விமானம் அதிகாலை 1:55 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கிய பின் விமானத்தை பராமரிக்கும் குழுவினர் பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

விமானத்தின் மீது பறவை மோதி உயிரிழந்ததை பொறியாளர்கள் கண்டறிந்தனர். பறவையின் உடலை வெளியே எடுத்த பின், பறவை எங்கு மோதியது என ஆய்வு செய்துவந்தனர். இதன் பின்னர் மீண்டும் கொழும்பு விமான நிலையத்தில் பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியது.

அந்த விமானத்தை ஆய்வு செய்த பொறியாளர்கள், விமானம் பிறப்பதற்கான தகுதியற்றது என அறிக்கை அளித்தனர். இதையடுத்து விமானம் முழுவதையும் சோதனை செய்யும் நடவடிக்கையில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement