தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கையில் நியூஸிலாந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது

 

Advertisement

கொழும்பு: இலங்கையில் தனியாக ஆட்டோவில் பயணம் செய்த நியூசிலாந்துப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், வீடியோ ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கைக்குத் தனியாக வந்து ஆட்டோவில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் நான்காவது நாளில், ஸ்கூட்டரில் வந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

அந்த இளைஞர், அப்பெண்ணிடம் பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததுடன், அவர் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 23 வயதான அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது வீடியோவில், ‘எனக்கு முன்னால் ஸ்கூட்டரில் வந்த ஒரு நபர், தொடர்ந்து வண்டியின் வேகத்தைக் குறைத்தார். நான் அவரை முந்திச் சென்றால், மீண்டும் அவர் என்னை முந்திச் சென்றார். பின்னர் நான் ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியபோது, அவர் என்னிடம் பேச்சு கொடுத்தார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகினாலும், அடுத்தடுத்து அவர் கேட்ட கேள்விகள் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தின.

அந்தக் கேள்வியை அவர் கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் மறுத்த பிறகும், என்னிடம் இப்படி அசிங்கமாக நடந்துகொண்டார். அவருக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது? தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்ணாக இருப்பதற்கு நான் கொடுக்கும் விலைதான் இது. இதுதான் கசப்பான யதார்த்தம். ஆனால் இந்த ஒரு சம்பவம் இலங்கையை வரையறுத்துவிடாது. நான் சந்தித்த உள்ளூர் மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்தனர்’ என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்

Advertisement

Related News