இலங்கை கைது நடவடிக்கை தொடர்கிறது மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
வக்பு வாரியத்தினுடைய அதிகாரங்கள் எத்தகையது. எதேச்சதிகார மனப்பான்மை கொண்டவர்களிடத்தில் அது சென்று சேர்ந்துவிடும் என்று சொன்னால் எத்தகைய விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த ஒரு சட்டமும் எல்லோருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமே தவிர ஒரு சார்பானதாக இருக்க கூடாது. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.
முந்தைய ஆட்சிக்காலங்களில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது பல்வேறு அரசியல் சூழ்நிலையிலும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படாமல் கைது செய்யப்படும்போதும் மிக விரைவாக விடுதலை செய்யப்படுகின்ற சூழல் உள்ளது. கடல் எல்லை சிறிதாக இருப்பதால் அவர்கள் தாங்கள் எல்லை என கூறுகிறார்கள். நாமும் நம் எல்லை என கூறுகிறோம். நிச்சயமாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.