தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை கைது நடவடிக்கை தொடர்கிறது மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சோளிங்கர்: இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிச்சயமாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
Advertisement

வக்பு வாரியத்தினுடைய அதிகாரங்கள் எத்தகையது. எதேச்சதிகார மனப்பான்மை கொண்டவர்களிடத்தில் அது சென்று சேர்ந்துவிடும் என்று சொன்னால் எத்தகைய விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த ஒரு சட்டமும் எல்லோருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமே தவிர ஒரு சார்பானதாக இருக்க கூடாது. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.

முந்தைய ஆட்சிக்காலங்களில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது பல்வேறு அரசியல் சூழ்நிலையிலும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படாமல் கைது செய்யப்படும்போதும் மிக விரைவாக விடுதலை செய்யப்படுகின்ற சூழல் உள்ளது. கடல் எல்லை சிறிதாக இருப்பதால் அவர்கள் தாங்கள் எல்லை என கூறுகிறார்கள். நாமும் நம் எல்லை என கூறுகிறோம். நிச்சயமாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement