தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர்!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனித்தனியே 3 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகு, வலைகள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார்.

Advertisement

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அங்குள்ள இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் படிப்படியாக விடுவித்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும், அவர்களுக்கு உரிய பாஸ்போர்ட் இல்லாததால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர். பின்னர் விமான டிக்கெட் உள்பட பல்வேறு ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து கொழும்பில் இருந்து சென்னைக்கு ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் 15 மீனவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement