தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டுழியம்: நாகை மீனவர்கள் 11 பேருக்கு அரிவாள் வெட்டு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் பிடித்த மீன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாட பொருட்களை பிடுங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நாகபட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நம்பியார்நகர் கிராமத்தை சேர்ந்த சசி குமார், உதயகுமார், சிவ சங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான படகிலும் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான படகிலும் 11 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்து கொண்டிருக்கும் போது கோடியக்கரை தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்த போது இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது கடற்கொள்ளையர்கள் படகில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியதில் சசிகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். அதே போல் சிவசங்கர் என்ற மீனவருக்கு இடதுகையில் மணிக்கட்டில் அறிவால் வெட்டு ஏற்பட்டு நரம்பு துண்டிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். 10 மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர்களிடம் இருந்த வலைகள், மீன்பிடி தளவாடப்பொருட்கள் , ஐஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பிடுங்கி சென்றனர். மேலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலைகள், சுசுகி எஞ்சின்களை பறித்து சென்றனர். மீனவர்கள் உயிருக்கு பயந்து அவர்களது உடமைகளை கடற்கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டு. தற்போது கரை திரும்பி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் சுதந்தரமாக மீன்பிடிப்பதற்கு ஒன்றிய, மணிலா அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாக்குதல் சம்பவங்கள் இனி தொடரக்கூடாது என்ற கோரிக்கையையும் நாகப்பட்டினம் மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

Advertisement