தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வல்லவன்கோட்டை காட்டில் சுற்றித்திரியும் புள்ளிமான்கள்: பாதுகாப்பு இல்லாததால் பொதுமக்கள் அச்சம்

நெல்லை: நெல்லை அருகே வல்லவன்கோட்டை பகுதியில் அதிகளவில் சுற்றித் திரியும் மான்கள், பாதுகாப்பின்றி அலைவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் வனத்துறையின் மான் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவில் 400க்கும் மேற்பட்ட புள்ளிமான்களும், மிளாக்களும் காணப்படுகின்றன. அங்கு போதிய குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் புள்ளிமான்கள் தண்ணீருக்காக வேலியை தாண்டி அங்கிருந்து வெளியேறுகின்றன. அவை நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் அடிபட்டு பலியாவதும், தண்ணீருக்காக குளங்களை தேடிச் செல்லும்போது வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

Advertisement

கங்கைகொண்டான் மான் பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள், தற்போது நெல்லை பல்கலைக்கழக வளாக பகுதிகளிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் அதிகம் தென்படுகின்றன. குறிப்பாக வல்லவன் கோட்டை பகுதியில் உள்ள புதர்காடுகளில் கூட்டம், கூட்டமாக திரியும் புள்ளிமான்கள், அடிக்கடி வயல்களுக்குள் இறங்கி பயிர்களை சிதைக்கின்றன. தண்ணீருக்காக அப்பகுதியில் சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீரை தேடி அலைகின்றன. மனிதர்கள் வருவதை கண்டால், கூட்டமாக மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிகின்றன. கங்கைகொண்டான் மான் பூங்காவை செம்மைப்படுத்தி, அனைத்து மான்களையும் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement

Related News