தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை உலக அளவிற்கு எடுத்துச் சென்றவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: பி.கே.சேகர்பாபு புகழாரம்

Advertisement

பெரம்பூர்: தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை உலக அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளார் துணை முதல்வர் உதயநிதி என்று அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டினார். துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்தநாளையொட்டி, சென்னை திருவிக. நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குக்ஸ் சாலையில், திமுக துணை அமைப்பு செயலாளரும் திருவிக.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தாயகம் கவி ஏற்பாட்டில், 500 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது.

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு போட்டியை துவக்கிவைத்து சிலம்பம் சுற்றிய மாணவர்களின் திறமைகளை கண்டு ரசித்தார். இதன்பின்னர் அங்கு நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்போது சென்னை மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர்.

முன்னதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது,’’தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையை உலக அளவுக்கு நம்முடைய துணை முதலமைச்சர் எடுத்து சென்றுள்ளார். சிலம்பக்கலையால் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பெற முடியும்’’ என்றார். தாயகம் கவி எம்எல்ஏ கூறும்போது, ‘’பங்கேற்றுள்ள 500 போட்டியாளர்களுக்கும் பரிசு கொடுக்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாட்டினுடைய இளைஞர்களையும் மாணவர்களை ஊக்குவித்து பல்வேறு போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சாதனைக்கு உறுதுணையாக இருந்து வருபவர் நமது துணை முதலமைச்சர் உதயநிதி’ என்றார்.

Advertisement

Related News