தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

Advertisement

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு மாவட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின்போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகள், ரயில்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20, 378 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே அரசு பஸ்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேரூந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதனிடையே , தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது 16ம் தேதி இன்று வியாழக்கிழமை 16,000 பேர், 17ம் தேதி வெள்ளிக்கிழமை 51, 500 பேர், 18ம் தேதி சனிக்கிழமை 47, 500 பேர், 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11, 500 பேர் என மொத்தம் 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement

Related News