தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்தாண்டு ஜன.24ல் நடத்த டிஆர்பி திட்டம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையின் படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு 2026 ஜனவரி 24ம் தேதி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனுவின் பேரில் வழங்கப்பட்ட தீர்ப்பின் பேரில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026ம் ஆண்டில் ஜனவரி, ஜூலை 2026 மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

Advertisement

2026ம் ஆண்டு தேர்வு முடிவுகளின் ஆய்வுக்கு பிறகு மீதம் தேர்ச்சி பெறவேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027ம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை231ன்படியும், தற்ேபாது தமிழ்நாடு பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் சிறப்பு தகுதித் தேர்வுகள் 2026ல் ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்கிணங்க 2026 ஜனவரி மாதத்தில் சிறப்பு தகுதித் தேர்வு உத்தேசமாக 24ம் தேதி தாள்1, மற்றும் 25ம் தேதி தாள் 2க்கான தேர்வுகள் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் மாத இறுதியில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை டிசம்பர்(2026) மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்பு தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்.

Advertisement

Related News