தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுவது அதிகார வரம்பை மீறுவதாகும்: உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம்

புதுடெல்லி: ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாக, வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான எந்தவொரு உத்தரவும் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான எந்தவொரு உத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும். திருத்தக் கொள்கையில் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான விருப்புரிமை உண்டு. அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல், தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தேர்தல் ஆணையத்திற்கான முழுமையான அதிகாரத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது’ என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News