தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் இந்த ஆண்டு 8% அதிகமாக மழை

புதுடெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பை காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நான்கு மாத தென்ேமற்கு பருவமழைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பருவத்தின்போது நாட்டில் வழக்கமாக 868மி.மீ மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த முறை 937மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Advertisement

இது 8 சதவீதம் அதிகமாகும். கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 1089.9மி.மீ. மழை பதிவாகி உள்ளது இது இயல்பாக பதிவாகும் 1367 மி.மீ. காட்டிலும் 20 சதவீதம் குறைவாகும். பீகார், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் நான்கு மாதங்களில் மூன்று மாதங்கள் பற்றாக்குறையாகவே பருவ மழை பெய்துள்ளது.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்த பருவமழை 1901ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது மிக குறைந்த மழைப்பொழிவாகும். வடமேற்கு இந்தியாவில் 747.9மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 587.6மி.மீ. அதிகமாகும். இது 2001ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்சம். தென்னிந்தியாவில் இயல்பான மழையான 716 மி.மீயைவிட 9.9 சதவீத அதிக மழை பதிவாகி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* அக்டோபரில் அதிக மழை

இன்று தொடங்கும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இயல்பை காட்டிலும் 15சதவீதம் அதிக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அக்டோபரில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளை தவிர, பருவமழைக்கு பிந்தைய காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ராயலசீமா, கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகள் இயல்பை காட்டிலும் அதிகமாக மழை பொழிவைபெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Related News