தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் இந்திய வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

ராய்ப்பூர்: டிசம்பர் 3, புதன்கிழமை அன்று ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததுடன், மெதுவாக பந்து வீசியதற்காக முழு அணிக்கும் போட்டி கட்டணத்தில் 10% அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதிமுறைகளின்படி, இந்திய அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐசிசி அறிக்கையின்படி, அணியின் கேப்டன் கே.எல். ராகுல் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் மற்றும் எந்தவிதமான விசாரணையையும் கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, ஒவ்வொரு ஓவர் தாமதத்திற்கும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்தியா இரண்டு ஓவர்கள் பின்தங்கியதால், அனைத்து வீரர்களுக்கும் 10% அபராதம் விதிக்கப்பட்டது.

2வது ஒருநாள் போட்டி கடைசி வரை பரபரப்பாக இருந்தது, இதில் தென்னாப்பிரிக்கா 359 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா சார்பில் எய்டன் மார்க்ரம் அற்புதமான சதம் அடித்தார்.

Advertisement

Related News