தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெற்கு குஜராத்தில் மூழ்கிய படகில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல்படை அதிரடி

Advertisement

அகமதாபாத்: குஜராத்தில் விபத்தில் சிக்கி மூழ்கிய படகில் இருந்து 5 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதிக்கு இந்திய மீன்பிடி படகு சென்றது. அந்த படகில் 5 மீனவர்கள் இருந்தனர். திடீரென மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதாக கடலோர காவல்படையின் தெற்கு குஜராத் டாமன் மற்றும் டையூ கடல்சார் மீட்பு துணை மையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து கடலோர காவல் படை மீட்புப் பிரிவு தளபதி கார்த்திகேயன் தலைமையிலான குழு, விபத்துக்குள்ளான படகை மீட்க விரைந்தது. சிறிது நேரத்தில் கடலோர காவல்படை கப்பல், விபத்து நடந்த இடத்தை அடைந்தது. அப்போது மீன்பிடி படகு பாதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது. அதில் இருந்த மீனவர்களும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.

கடலோர காவல்படையினரின் முயற்சியின் பலனாக, படகில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, 5 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின் அந்த படகும் மீட்கப்பட்டது. இருந்தபோதும் படகின் 75% பகுதி நீரில் மூழ்கி இருந்ததால், படகை உடனடியாக கரைக்கு கொண்டு வர முடியவில்லை என்று கடலோர காவல்படை தெரிவித்தது.

Advertisement

Related News