தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுக்கும் மழை; சோத்துப்பாறை அணை நீர்மட்டம் கிடுகிடு: ஒரே நாளில் 10 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

 

Advertisement

தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதனால், பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணை பெரியகுளம் நகருக்கான குடிநீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார பாசன நிலங்களுக்கான நீர் ஆதாரமாகவும் உள்ளது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் போது அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தததையடுத்து சோத்துப்பாறை அணை நிரம்பியது. அதன்பின் போதிய மழை இல்லாததால் படிப்படியாக நீர்மட்டம் 66 அடிக்கு குறைந்தது.

இந்த நிலையில் ஜூன் மாதத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 100 அடி வரை உயர்ந்தது. ஆனால் அதன் பின்னர் நீர்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக 67 அடிக்கு குறைந்தது. கடந்த ஒரு மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால் மீண்டும் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 76 அடியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று பகல் மற்றும் இரவு நேரத்தில் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 86.42 அடியை எட்டியது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 112 கனஅடி. அணையில் இருந்து பெரியகுளம் நகராட்சி பகுதி மக்களின் குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News