தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோரி சோரி, சுப்கே சுப்கே.. வாக்குத் திருட்டு குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகுல் காந்தி..!!

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லாபடா லேடீஸ் (காணாமல் போன பெண்கள்) என்ற இந்தி படத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காட்சியை, தேர்தல் ஆணையத்தின் மீதான புகாருக்கு ஏற்றவாறு மாற்றி வெளியிட்டுள்ளார். லாபடா லேடீஸ் படத்தில், மனைவியைக் காணவில்லை என்று கணவர் புகார் கொடுக்க வருவார். ஒரு நிமிடம் ஓடும் அந்த விடியோவை, சோரி சோரி, சுப்கே சுப்கே என்ற இந்தி பாடலின் வரிகளுடன் இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை, மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர் என்று பதிவிட்டு ஷேர் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில், ஒருவர் காவல்நிலையம் வந்து, திருட்டுப் புகார் கொடுக்க வந்திருப்பதாகக் கூறுகிறார். அதைக் கேட்ட போலீஸ், வழக்கமாக மக்கள் திருட்டுப் புகார் கொடுக்கும் பொருள்களின் பெயர்களை பட்டியலிடுகிறார். ஆனால், அதெல்லாம் இல்லை, எனது வாக்குத் திருட்டுப் போனதாக அவர் கூறுகிறார். மேலும், வாக்குத் திருட்டிலிருந்து சுதந்திரம் என்ற பிரசாரத்தில் பங்கேற்று, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறும் காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. மேலும், பிகார் மாநிலத்திலிருந்து 17ம் தேதி வாக்காளர்களின் அதிகார பயணத்தை ராகுல் காந்தி தொடங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.