தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சொரிமுத்தையனார் கோயில், தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

*பள்ளி மாணவர்கள், வனப்பணியாளர்கள் நடவடிக்கை

விகேபுரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில், தாமிரபரணி ஆற்று பகுதியில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்களை பள்ளி மாணவர்கள், வனப்பணியாளர்கள் அகற்றினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின்படி முண்டந்துறை வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் முண்டந்துறை வனச்சரக அலுவலர் கல்யாணி, பாபநாசம் வனச்சரக அலுவலர் குணசீலன் ஆகியோர் தலைமை வகித்தார்.

விழாவில் முத்தமிழ் பப்ளிக் பள்ளியின் தலைவர் அமரவேல், தாளாளர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி வேளாண்மை ஆசிரியர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி மற்றும் முத்தமிழ் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு வனத்தினை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், வனத்தை பாதுகாப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ‘உலகளாவிய நெகிழி மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதல்’ என்ற தலைப்பில் சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதி, தாமிரபரணி ஆற்றுப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.