தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விரைவில் மெகா கூட்டணி: அன்புமணி ஆசை

 

Advertisement

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, பாமக நிர்வாகி இல்ல திருமணத்தை நடத்தி வைத்து கட்சியின் தலைவர் அன்புமணி பேசுகையில், அய்யா (ராமதாஸ்) போராட்டத்தை அறிவித்தால், கடிதம் வரும். அந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அவர் பின்னால் நின்றோம். இன்றும் அவர் பின்னால் இருக்கிறோம். நான் முதலமைச்சரானால், முதல் 2 மாதத்தில், படித்தவர் என்ன வேலை செய்கிறார் என்பது போன்ற கணக்கெடுப்பு நடத்துவேன் என்றார்.

பின்னர், அன்புமணி அளித்த பேட்டியில், தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலையில் சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது‌. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை‌. வரும் 17ம் தேதி எனது தலைமையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதில் பங்கேற்க அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் வெற்றிக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதே காரணம். சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.சுவாமி தரிசனம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி, மனைவி சவுமியா மற்றும் மகள்களுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

* ஜி.கே.மணி துரோகியா?

ஜி.கே.மணி தனது பெயரை குறிப்பிட்டு துரோகி என்று அன்புமணி சொன்னால் கட்சியில் இருந்து விலக தயார் என தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, பதில் சொல்ல விரும்பவில்லை. கட்சி தொண்டர்களிடம் பேசுகிறேன் என அன்புமணி கூறினார்.

Advertisement