தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடி திருவிழா; சோனை கருப்பசாமிக்கு 2,000 மதுபாட்டில் படையல் : ஆடு, சேவல் பலியிட்டு கமகமக்கும் கறிவிருந்து

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறு கோயிலுக்கு அடுத்த பிரசித்தி பெற்றதாக திகழும் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத சனிவார திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அறங்காவலர் குழுவினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால், திருவிழா நடைபெறாமல் பூஜைகள் மட்டும் செய்து வழிபட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆடி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் பரிவார தெய்வமாக இருக்கும் சோனை கருப்பசாமிக்கு ஆடி படையல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இரவில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் 2000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கருப்பசாமிக்கு படையலாக வைத்து வழிபாடு செய்தனர். பூசாரிகள் நள்ளிரவில் வாயில் துணியை கட்டி குதிரைக்கு அருகில் உள்ள துளையில், ஒவ்வொரு பாட்டிலாக ஊற்றி படையலை நிறைவேற்றினர். ெதாடர்ந்து நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கமகம கறிவிருந்து நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related News