தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம்

நிலக்கோட்டை: மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணமடைந்தார். இதனால் கர்ப்பிணி மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). பாஸ்ட் புட் மாஸ்டர். இவர், 10 மாதங்களுக்கு முன் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாளை(21) காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்னர் நாகம்மாளை, பெற்றோர் அவர்களது ஊருக்கு அழைத்து சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே உள்ள நிலையில் மனைவியை பார்க்க அருண்குமார் தினமும் இரவு மாமனார் வீட்டிற்கு சென்று வந்தார்.
Advertisement

கடந்த 25ம் தேதி இரவு வேலை முடிந்து சிலுக்குவார்பட்டிக்கு டூவீலரில் சென்றவர், அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே சாலையோரம் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வந்தனர்.

இதனிடையே மகள் கர்ப்பிணியாக உள்ளநிலையில் மருமகன் இறந்துவிட்டாரே என்ற வேதனையில் நாகம்மாளின் தாய் சின்னப்பொண்ணு (46) கதறி அழுதுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னப்பொண்ணுவும் உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து தாயும் உயிரிழந்ததால் மன உளைச்சலில் நாகம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Related News