தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்: முதன்மை கல்வி அதிகாரி அதிரடி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த செங்கங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). கோட்டூர் ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், பல்வேறு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருபவர் என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அவரது உடல்நிலை குறித்தும், பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அரசுக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணைக்கு பின்னர், திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சௌந்திரராஜன், இடைநிலை ஆசிரியர் ரமேஷை சஸ்பெண்ட் செய்து நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார், மேலும், கோட்டூரில் ஆசிரியர் ரமேஷ் தங்கி இருக்க வேண்டுமென உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியராக இருந்து கொண்டு பல்வேறு சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக வந்த புகாரின் பேரில் கோட்டூர் ஒன்றியத்தில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் ரமேஷின் பணியிடை நீக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News