தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழுவில் கோஷ்டி மோதல், கடும் வாக்குவாதம்

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 18வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடந்தது. தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்பட 100க்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் ரவிவர்மா, ரவிசங்கர், எம்.டி.மோகன் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
Advertisement

சிவன் சீனிவாசன் பேசும்போது இணை செயலாளர் தினேஷ் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது எதிரணி தரப்பில், ‘2022ல் சங்கத்தின் தலைவராக இருந்த ரவிவர்மா செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, கடந்த 5 வருடங்களாக சங்கத்தின் உறுப்பினர் சிலருக்கு வேலையிழப்பு, பேச நேரம் தரப்படவில்லை, அப்படி பேசினால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள்’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிறகு இணை செயலாளர் தினேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழுவில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மருத்துவ திட்டத்தை மீண்டும் கொண்டு வரவில்லை. மெடிக்கல் கார்டு மூலம் சிகிச்சை பெற்ற தர் என்பவருக்கு தவறான சிகிச்சையால் ஒரு கண் பறிபோய்விட்டது. அது சம்பந்தமாக கடிதம் கொடுத்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த சங்கம் தொழிலாளர்கள் நலத்துறையில் பதிவு செய்யப்பட்டது. இதுவரை யாருக்கும் வேலைவாய்ப்புக்காக எதையும் செய்யவில்லை. பேச அனுமதி இல்லை. ரவிவர்மா, எம்.டி.மோகன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அதற்கு விளக்கமளிக்க முயன்றால் அனுமதிப்பது இல்லை. நான் பொறுப்பில் இருந்தாலும், என் கருத்தை பதிவு செய்ய அனுமதி இல்லை’ என்றார்.

Advertisement

Related News