தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாஜகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில் சின்னத்திரையில் கல்லா கட்டும் ஸ்மிருதி இரானி: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் பரபரப்பு

மும்பை: நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வந்துள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகை தான்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சித் தொடர் நடிகையாக இருந்தார். ‘கியூங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற புகழ்பெற்ற தொடரில், துளசி விரானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். கடந்த 2000 முதல் 2008 வரை ஒளிபரப்பான இத்தொடர், இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்றது.

சிறந்த மருமகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடருக்காக, ஸ்மிருதி இரானி தொடர்ந்து ஐந்து முறை சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றார். பாஜகவில் சேர்ந்து அமேதி தொகுதி எம்பியாகி அமைச்சரான அவர், கடந்த 2024 தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். அதனால் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அதே தொலைக்காட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக சின்னத்திரைக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், அவரது சம்பளம் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

ஒரு அத்தியாயத்தில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானி ரூபாய் 14 லட்சம் சம்பளம் பெறுவதாகவும், இதன்மூலம் இந்திய தொலைக்காட்சித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் உருவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவின. தொடர்ந்து பரவி வந்த இந்த தகவல்களுக்கு ஸ்மிருதி இரானி தற்போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்திய தொலைக்காட்சித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நான் தான்’ என்று உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார்.

Related News