தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

 

* பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக் கொண்டால் சுடு தண்ணீரை ஊற்றினால் சரியாகிவிடும்.

* வேகவைத்த பலாக் கொட்டைகளை தோல் நீக்கிய பின், உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது வோல் உப்பு, காரம் சேர்த்து செய்தால் சூப்பர்.

* பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில் போட்டு பொரித்து எடுத்தால் நன்றாக இருக்கும்.

* சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலை அகற்றி வட்டவடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் சுவையாக இருக்கும்.

* சாம்பார், கீரை, புளிப்புக் கூட்டு போன்றவற்றை முடிந்து இறக்கும் சமயம் வெந்தயப் பொடி தூவினால் சுவையும், மணமும் சுவையாகஇருக்கும்.

* புதினா ஜீரண சக்தியும், ரத்த சக்தியும் பெற வல்லது. புதினா இலைகளை முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும்.

* எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரண்டி மோர்விட்டு கலக்கிய பின் தேய்த்தால் பிசுக்கு நொடியில் போய்விடும்.

* பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துப் பிசைந்தால் பூரி சுவையாக இருக்கும்.

* உருளைக்கிழங்கை வாங்கும்போது அதன் மேல்பகுதி பச்சையாக இருந்தால் அதனை வாங்க வேண்டாம்.

* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் அதனை உப்புக் கலந்த நீரில் ½ மணி நேரம் போட்டு வைத்தால் புதியது போல் ஆகிவிடும்.

* சூப் தயாரிக்கும்போது அதில் இரண்டு ஸ்பூன் பார்லி நீர் கலந்து குடித்தால் உடல் பலம் பெறும்.

* எள்ளடை மாவில் பூண்டு உரித்து நசுக்கிப்போட்டு கலந்து எள்ளடை சுட்டால் மணமும், சுவையும் நன்றாக இருக்கும்.

- விமலா சடையப்பன்