தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்

* புது அரிசி வடிக்கும் போது குழைந்து விட்டதா… கவலை வேண்டாம், அரை மூடி எலுமிச்சம் சாறு விட்டு இறக்குங்கள் பொல பொலவென இருக்கும்.

* ஆம்லெட் தயார் செய்ய முட்டையோடு கொஞ்சம் பால் கலந்து அடிச்சிப் போடுங்கள். அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

* கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். மணம் கம, கமவென இருக்கும்.

*கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்துப் போட்டு திரிச்சா சப்பாத்தியோ, பூரியோ எதுவானாலும் சுவை, வாசனை, சத்து அதிகமாக இருக்கும்.

*வெஜிடபிள் சாலட் செய்யும்போது நீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள். சரியாகி விடும். சுவையும் நன்றாக இருக்கும்.

*ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.

* மோர்க்குழம்பு செய்து இறக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே தனி.

* மீன் சமைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சைச்சாறு விட்டால் ருசியாக இருப்பதுடன் மீனும் கறுக்காது.

* கடலையை வறுப்பது போல் கூழ் வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்து எடுக்கலாம். பெரிதாகவே பொரியும்.

* வெண்டைக்காய் கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் சுவையாக இருப்பதுடன் வழவழப்பும் இருக்காது.

*பால் இளஞ்சூடாக இருக்கும்போது உறை ஊற்றினால் தான் தயிர் நன்றாக தோயும். சுவையும் இருக்கும்.

* பீன்ஸ் பருப்புகளை வேகவைக்கும் போது முதலியே உப்பு போடக் கூடாது. உப்புப் போட்டால் வேக வெகுநேரம் எடுத்துக் கொள்ளும்.

* குளிர் சாதன பெட்டியில் வைக்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் வைப்பதைவிட அலுமினியத்தாளில் வைத்தால் அதிக நாட்கள் கெடாது.

* அவியல், பச்சடி இவைகளில் தயிர் சேர்ப்பதால் அவை விரைவில் புளித்து விடும். இதைத் தடுக்க உபயோகிக்கும் போது உப்பு சேர்த்தால் சீக்கிரம் புளிக்காது.

* தோசை வார்க்கும் போது ஒட்டிக் கொண்டால் வெங்காயத்தை இரண்டாக வெட்டி தோசைக் கல்லில் தேய்த்தால் தோசைக்கல்லில் ஒட்டாது.

* தோசை, இட்லிக்கு ஆட்டிய மாவுகள் புளிக்காமல் இருக்க அதில் இரண்டொரு வெற்றிலைகளை போட்டு வைக்கலாம்.

* உப்பு ஜாடியில் சிறிது அரிசியை போட்டுவைத்தால் கட்டி பிடிக்காது.

* பச்சை மிளகாயின் காம்புகளை கிள்ளி வைத்தால் அவை வாடாமல் இருக்கும்.

* சப்பாத்தி மாவில் கொஞ்சம் டால்டா கலந்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

- விமலா சடையப்பன்.

Related News