தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்

*தயிர் சாதம் கிளறும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறினால் தயிர் சாதம் சுவையாகவும், நல்ல வாசனையுடனும் இருக்கும்.

*போளி தட்டும் போது வாழை இலையில் பின் பக்கமாக தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

*வியர்வை நாற்றம் இருந்தால் குளிக்கும் நீரில் படிகாரத்தை கலந்து குளித்தால் நாற்றம் மறைந்து போகும்.

*ஜன்னலின் வெளிப் புறத்தில் கற்பூரவல்லி, துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்க்க வீட்டில் நச்சு பூச்சிகள், உயிரினங்கள் குறையும்.

*கட்லெட் செய்ய ரொட்டித் தூள் இல்லையெனில் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

*சுடுநீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து அணுதினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுக்கள் அண்டாது.

*அடைக்கு ஊறவைக்கும் போது பயத்தம் பருப்பு, ஜவ்வரிசியை ஊறவைத்து அரைத்தால் அடை மொறு, மொறுவென சுவையாக இருக்கும்.

*வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தோசை மாவில் இரண்டு ஸ்பூன் கலந்து வார்த்தால் நன்றாக இருக்கும்.

*இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிதளவு புதினா இலையை சேர்த்து அரைத்தால் மணமும், சுவையும் தூக்கலாக இருக்கும்.

*இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற விட்டால் வெங்காய சட்னி தயார்.

*வெயில் காலம் என்பதால் எந்தவிதமான குளிர்பானம் செய்தாலும் அதில் ஒரு துண்டு இஞ்சியை கலந்து கொண்டால் சளி பிடிக்காது.

*வாழைக்காய் நறுக்கும் போது கரையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கரை ஏற்படாது.

*வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.

*முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.

- விமலா சடையப்பன்

Related News