தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

Advertisement

* லவங்கப்பட்டை, சோம்பு இவற்றை லேசாக வறுத்து, பொடி செய்துகொண்டு, உருளைக் கிழங்கு, பட்டாணி போன்ற வற்றுக்கு மசாலாவுடன் ஒரு ஸ்பூன் சேர்த்துவிட்டால் மணமணக்கும்.

* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அதனுடன் வறுத்த சேமியாவையும் நொறுக்கிப்போட்டு, வறுத்த முந்திரியையும் சேர்த்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் பால் சூடாக விட்டு, கிளறி திடீர் பாயசம் செய்யலாம்.

* கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றை அதிகம் வதக்காமல் பச்சையாக உணவில் சேர்த்துக் கொண்டால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.

* தோசை மாவு புளித்துவிட்டால் ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கலந்துவிட்டால் புளிப்பு இருக்காது.

* இட்லி, தோசை மாவு ஒரு லிட்டருக்கு ஒரு ஸ்பூன் வீதம் மிளகாய்த்தூள் கலந்துவிட்டால் மாவில் புளிப்பே இருக்காது.

* சாம்பாரை இறக்கும் முன்பு ஒரு ஸ்பூன் தனியா விதை, ஒரு வரமிளகாய் வறுத்து கரகரவென அரைத்து பொடியைக் கலக்கினால் மணம் வீசும்.

* இட்லிக்கு அரைக்கும் உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு, ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

* மக்காச் சோளத்தை ரவை போல் அரைத்து அதில் ஒரு பங்குக்கு அரைபங்கு உளுந்து ஊறவைத்து அரைத்து, மறு நாள் இட்லி சுட்டால் சுவையாக இருக்கும்.

* கால் டம்ளர் பச்சரிசி, 1 சிவப்பு மிளகாய், சிறிது பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது இப்பொடியைச் சேர்த்து வதக்கினால் சூப்பராக இருக்கும்.

* மேத்தி சப்பாத்தி செய்யும்போது நறுக்கிய வெந்தயக்கீரை, பாலக்கீரையை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, கால் கப் பாசிப்பருப்பு சேர்த்துச் செய்தால் சூப்பராக இருக்கும்.

* மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக்கி, ஊறவைத்து, உளுத்தம் பருப்போடு சேர்த்து அரைத்து வடை செய்தால் சூப்பராக இருக்கும்.

* மோர்க்களி கிளறும்போது அரிசிமாவு 3 கப், மைதா ஒரு கப் கலந்து கிளறினால் டேஸ்ட்டாக இருக்கும்.

- எம்.ஏ.நிவேதா

 

Advertisement