தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

Advertisement

* நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிது வெண்ணெயைக் கலந்து வைத்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* பலகாரம் செய்யும் எண்ணெயில் இரண்டு மூன்று கொய்யா இலைகளை போட்டு விட்டால் எண்ணெய் பொங்கி வழியாது.

* பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய்க் கறை உடையில் பட்டு விட்டால் அந்த இடத்தில் கோதுமை மாவைத் தேய்த்து தண்ணீரில் அலசி எடுத்தால் போதும். எண்ணெய்க் கறை நீங்கிவிடும்.

* ஏலக்காய்த் தோலை டீத்தூளில் போட்டு வைத்தால் டீ ஏலக்காய் மணத்துடன் சூப்பராக இருக்கும்.

* காபிப்பொடியை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி, ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் நீண்ட நாட்களுக்கு மணம் அப்படியே இருக்கும்.

* விருந்தினர்கள் நண்பர்களுக்கு காபி, டீயில் சர்க்கரை போடாமல், சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் அல்லது மரக் கலக்கி வைத்துவிடுங்கள். ஏனெனில் யாருக்கு என்ன உடல் பிரச்னை இருக்கிறது என்பது இப்போதெல்லாம் தெரிவதில்லை.

* டீத்தூளை சிறிது நேரம் வெயிலில் உலர வைத்து, பிறகு டீ போட்டு சாப்பிட்டால் டீ மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

* பயன்படுத்தப் பட்ட டீ. காபி தூளை செடிகளுக்கு போட்டால் நல்ல உரமாகும்.

* ஏலக்காயை பொடி செய்தால் எளிதில் பொடியாகாது. இதைத் தவிர்க்க ஏலக்காயுடன் சிறிது சீனி சேர்த்துப் பொடித்தால் எளிதில் பவுடர் போல் ஆகிவிடும்.

* எந்தவித பலகாரம் செய்தாலும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து பலகாரம் செய்து எண்ணெயில் போட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

* சாறு எடுத்தவுடன் திராட்சைச் சக்கையை கொண்டு பழக்கூழ் தயாரிக்கலாம்.

* டீ போட்டவுடன் டீத்தூளை உலர்த்தி அதில் புகை போட்டால் ஈ, கொசுத்தொல்லை இருக்காது.

* சூடான டீ காபியை உடனே கண்ணாடி டம்ளரில் ஊற்றிவிட வேண்டாம். டம்ளரில் ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு பிறகு சூடானவற்றை ஊற்றினாலும் டம்ளர் உடையாது.

* தேநீரை ஊற்றுவதற்கு முன்பு டம்ளரில் ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலைப் போட்டு, டீயை ஊற்றி, சிறிது நேரத்தில் தோலை எடுத்துவிட்டால் டீ மணமுடனும் ருசியுடனும் இருக்கும்.

- எம். ஏ. நிவேதா

Advertisement

Related News