தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்

* உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போய் விட்டால், அந்த தேங்காய் மூடியில் பாலை ஊற்றி பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு தேங்காயை உபயோகித்தால் புதியது போல இருக்கும்.

Advertisement

* ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி பாதியை உபயோகித்து விட்டு மீதி பாதியை அடுத்தநாள் உபயோகிக்க வேண்டுமானால் பாதி எலுமிச்சை பழத்தின் மீது உப்பைத் தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

* ஆரஞ்சுப்பழத் தோலை காய வைத்து கொசுவத்தி போல கொளுத்தி வைத்தால் கொசுக்கள் வராது.

* சாதம் கொதிக்கும் போது ஒரிரு ஏலக்காய்களை சிறிது நேரம் போட்டு எடுத்துவிட்டால் சாப்பாடு மணமாக இருக்கும்.

* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியதாகிவிடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

* நுங்கு தோலை எடுத்து அதனுடன் சந்தனத்தைச் சேர்த்து அரைத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் வேர்க்குரு மறைந்து உடல் வெப்பம் குறையும்.

* வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்களில் கண்ணீர் வராது.

* உப்பு கரைத்த நீரில் தக்காளியைப் போட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.

* வெள்ளி ஆபரணங்களோடு சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி நகை கறுக்காது.

* கீரையினை வேகவைக்கும்போது சிறிதளவு எள் சேர்த்து வேகவைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

* அவித்த முட்டையை அறுக்க கத்தியை பயன் படுத்தாமல் கெட்டியான நூலைப் பயன்படுத்தி அனுத்தால் அழகாய் கட் ஆகும். மஞ்சள் கரு உதிராமல் வரும்.

* இட்லி மாவு புளிக்காமல் இருக்க சிறு வாழைத்தண்டை மாவில் போடவும்.

* சிறு தேங்காய்த் துண்டை தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் வரை தயிர் கெட்டுப்போகாது.

- தாமஸ் மனோகரன்.

Advertisement