தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* உளுந்தங் கஞ்சி செய்யும்போது சுக்கை பொடித்து சேர்த்தால் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.

Advertisement

* தீப்பெட்டி ஈரமாகி கொளுத்தவில்லை யெனில் அரிசி மாவைத் தேய்த்து விட்டு கொளுத்தினால் ‘டக்’கென பிடித்து எரியும்.

* இட்லி தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும்போது சிறிது புளியை வறுத்து அரைத்து கலந்து வைத்தால் அதன் ருசியே தனி.

* பீங்கான், வாஷ்பேசின், குளியல் தொட்டிகளில் மஞ்சள்கறை படிவது சகஜம். உப்பும், டர்பன்டைன் ஆயிலும் கலந்து தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.

* பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். அதில் பத்து சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் உறையாது.

* நைலான் கயிறை வாங்கியவுடன் சிறிது சோப்பு நீரில் நனைத்து பின் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.

* வெங்காயப் பச்சடி செய்யும்போது புதினா இலைகளை நறுக்கிச் சேர்த்தால் பச்சடி சுவையாக இருக்கும்.

* புளிசாதம் செய்யும்போது சிறிது எள் வறுத்துப் பொடிசெய்து சாதத்தில் கலந்தால் சாதம் சுவையாக இருக்கும்.

* பாலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவைத்துக் குடித்தால் நெஞ்சுச் சளி வெளியேறி விடும்.

* கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

* பால் சுரப்பு நிற்க தேங்காய்ப் பூவை வதக்கி மார்பில் கட்டினால் பால் சுரப்பு நின்று விடும்.

* துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி போன்றவற்றை வெங்காயத்தை வெட்டி தேய்த்தால் துரு போய்விடும்.

* வாழை இலையை கோணிப்பையில் சுற்றி வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல், வதங்காமல் அப்படியே இருக்கும்.

- விமலா சடையப்பன், காளைம்பட்டி.

Advertisement

Related News