தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

*தயிர் சாதம் கிளறும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறினால் தயிர் சாதம் பொல பொலவென சுவையுடன் இருக்கும்.

Advertisement

*காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க, சிறிது உப்பு போட்டால் போதும்.

*தோசைக்கல்லில் மோர் மிளகாயை வறுத்தால் அதிக எண்ணெய் செலவு ஆகாது.

*மோரில் ஊறவைத்த வாழைப்பூவை நெய்விட்டு வதக்கி துவையல் அரைத்தால் சுவையாக இருக்கும்.

*இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிதளவு புதினா இலையை சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

*வெந்தயத்தை வறுத்து பொடி செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தோசை மாவில் இரண்டு ஸ்பூன் கலந்து வார்த்தால் நன்றாக இருக்கும்.

*கொள்ளுப்பருப்பை வறுத்து பொடி செய்து சாம்பாரில் ஒரு ஸ்பூன் சேர்த்தால் சாம்பார் மணக்கும். சுவையாக இருக்கும்.

*பாயசத்தில் திராட்சைக்கு பதில் பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்துப் போட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

*தேனில் நான்கு நெல்மணிகளை கழுவி போட்டு வைத்தால் தேன் அதிக நாட்கள் கெடாது.

*சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டால் சாதம் வெண்மையாக இருக்கும்.

*காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த நீரில் சில நிமிடம் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

*தினமும் புளியைக் கரைத்து பின் கிடைக்கும் சக்கையை வெயிலில் உலர்த்தி குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் பொடி செய்து காப்பர், பித்தளைப்பாத்திரங்களை துலக்கினால் பளிச்சிடும்.

*தேங்காய்ப் பால் அரைக்கும் போது, தேங்காய் உடைத்த தண்ணீரை விட்டு அரைத்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

*கிரேவி சிவப்பு நிறமாக வர வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கினால் போதும்.

- விமலா சடையப்பன்

Advertisement

Related News