தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* பழைய புளி உடல் சூட்டை அதிகம் செய்தாலும், கண் நோயை குணமாக்கும். வாதப் பிரச்னைகளைக் குறைக்கும். புதுப்புளி உடல் வலுவைக் குறைக்கும். முடியை நரைக்கவும் செய்யும்.

Advertisement

* முருங்கைப் பூ கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* பலாக்காய் உடல் சூட்டை சமன்படுத்தும். வாத, கப நோய்கள் உண்டாகும்.

* அவரைப் பிஞ்சு பெண்களின் சூதக வலியை குணமாக்கும்.

* பொன்னாங்கண்ணிக் கீரை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

* மன அமைதி பெற மணத்தக்காளிக் கீரை நல்லது.

* வெந்தயத்தை அடிக்கடி சமையலில் சேர்த்தோ, ஊறவைத்தோ உண்பது சிறுநீரகக் கல் உண்டாகாமல் காக்கும்.

* கசகசா உடல் அரிப்பினைப் போக்கி நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.

v லவங்கப் பட்டை உண்ட உணவை செரிக்கச் செய்யும்.

* கொள்ளு பருப்பை சுண்டலாகவோ, ரசம் வைத்தோ உட்கொண்டால் மூட்டுகள் வலுவடையும். உடல் வலி போகும். ஊளைச் சதையைப் போக்கி எடை குறைய உதவும்.

* உளுந்து உடல் நலத்திற்கும், சதை வளர்ச்சிக்கும் நல்லது. குளிர்ச்சி தரும்.*உளுந்து வடை தயாரிக்க மாவு அரைக்கும் போது இரண்டு தேக்கரண்டி அரிசியை ஊறவைத்து அரைத்தால் வடை கரகரப்பாக இருக்கும்.

* மோர்க்குழம்பு செய்யும் போது ஊறவைத்த துவரம் பருப்பை அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக பொட்டுக் கடலையை அரைத்து சேர்க்கலாம்.

* ரசம் மணக்க வேண்டுமா? நெய்யில் கடுகு தாளித்து பெருங்காயத்தூள் போட்டு ரசத்தில் சேர்த்தால் போதும்.

* தேங்காய் சட்னி அரைக்கப் போகிறீர்களா? ஒரு தேக்கரண்டி துருவிய மாங்காய் சேர்த்தால் சுவையே தனிதான்.

* பனங்கிழங்கு உடலுக்கு வலுவையும், வனப்பையும், குளிர்ச்சியையும் தரும்.

* பாதாம் பருப்பு மூளைக்கு வலிமை தருவதோடு, புதுரத்தம் பெருக்கும்.

* நேந்திர வாழைப்பழம் இதயத்தை பலப்படுத்தும். ரத்தம் பெருகச் செய்யும்.

- விசாலாட்சி கண்ணன், ஒசூர்

Advertisement