தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வழுக்கு மரம் ஏறும் போட்டி

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தேத்தாம்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வழுக்கு மரம் ஏறும் போட்டி நேற்று நடைபெற்றது.

இதற்காக 50 அடி உயரம் உள்ள கழுமரம் வெட்டி கொண்டு வரப்பட்டது. அதன் பட்டைகள் உரிக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான சோற்றுக்கற்றாழை, எண்ணெய் வகைகள் தடவப்பட்டு கோயில் மைதானத்தில் ஊன்றப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தேத்தாம்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர உச்சியில் ஏறி, அதில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருள்களை அவிழ்த்தார். இந்த போட்டியை சுற்றுவட்டார கிராமமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.