வழுக்கு மரம் ஏறும் போட்டி
இதற்காக 50 அடி உயரம் உள்ள கழுமரம் வெட்டி கொண்டு வரப்பட்டது. அதன் பட்டைகள் உரிக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான சோற்றுக்கற்றாழை, எண்ணெய் வகைகள் தடவப்பட்டு கோயில் மைதானத்தில் ஊன்றப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தேத்தாம்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர உச்சியில் ஏறி, அதில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருள்களை அவிழ்த்தார். இந்த போட்டியை சுற்றுவட்டார கிராமமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.