தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் காட்டுத் தீ: தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

சிவகிரி: சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் காட்டுத் தீ பிடித்து வேகமாக பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு மாடு, மிளா, மர அணில்கள் உள்ளிட்ட விலங்கினங்களும், தேக்கு, ஈக்கி, வேங்கை, கோக்கு ஆகிய அரிய வகை தாவர இனங்களும் உள்ளன. மேலும் மூலிகைச் செடிகளும் ஏராளமான அளவில் உள்ளன.

Advertisement

இந்நிலையில் சிவகிரிக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோம்பையாறு, சுனைப்பாறை பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று காட்டுத் தீ பிடித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வெயில் அடித்ததால் மரங்கள் காய்ந்து இருந்தது. இதனால் தீ மளமளவென்று வேகமாக பரவி வருகிறது. மேற்குத் ெதாடர்ச்சி மலை இயற்கையின் உயிர் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் தூவி அணைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழலியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த காட்டுத் தீயால் சிவகிரியை சுற்றி 7 கி.மீ., தூரத்திற்கு வீடுகளில் சாம்பல் துகள்கள் படிந்துள்ளன.

காட்டுத் தீ குறித்து தகவலறிந்த சிவகிரி ரேஞ்சர் ஆறுமுகம், வனவர்கள் குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement